ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் அழித்தது: சொல்கிறார் பிரதமர் நெதன்யாகு

ஜெருசலேம்: ''ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் அழித்தது'' என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாகி உள்ளது. இது தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது. ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் அழித்தது. ஈரானுக்கு எதிரான போரில் அணுசக்தி திட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.
நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி திட்டத்தை நாங்கள் முறியடித்துவிட்டோம். ஈரானில் யாராவது அதை மீண்டும் கொண்டு வர முயற்சித்தால், எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க அதே உறுதியுடன், அதே தீவிரத்துடன் செயல்படுவோம்.
ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் ஏவுகணைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் முறியடிக்கப்பட்டு உள்ளது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்று பெயரிடப்பட்ட ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல், வரலாற்றில் பதிவு செய்யப்படும். உலகம் முழுவதும் உள்ள படைகளால் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு நெதன்யாகு கூறினார்.




மேலும்
-
பல தடைகளை தாண்டி....விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
-
காற்றில் ஊழல் செய்து அம்பலப்பட்ட ஆ. ராசா அமித் ஷா பற்றி பேசலாமா: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!
-
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை!
-
பதவிக்காக சமூக நீதியை பலி கொடுக்கும் தி.மு.க. அரசு: அன்புமணி விளாசல்