வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!

சென்னை: ''நாங்கள், 234 தொகுதிகளுக்கு இணையானவர்கள், தகுதியானவர்கள். எங்களை வெறும் டீ, பன் கொடுத்து ஏமாற்றிவிடலாம் என்று நீங்கள் கணக்கு போடாதீர்கள்'' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தேசிய பார்வை
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியதாவது: வெறும் ஜாதி அரசியலையும், மத அரசியலையும், ஜாதி பெருமிதங்களையும், மத பெருமிதங்களையும் அரசியலாக இங்கு மக்கள் மத்தியில் அள்ளி இறைத்து கொண்டு இருப்பவர்கள் மத்தியில், இடதுசாரி பார்வை கொண்ட கருத்தியல், இந்த மண்ணுக்கு தேவை. தேசிய அளவில் அது வலிமை பெற வேண்டும். அதற்கு தேசிய பார்வையும் தேவை என்கிற அடிப்படையில் இயங்கும் இயக்கம் தான் விடுதலை சிறுத்தை கட்சி.
பேரணி நடத்துகிறோம்
அதனால் தான் எல்லோரும் தேர்தல் கணக்கு போடுகிற போது, நாம் தேசத்தின் பாதுகாப்பை பற்றி, கவலைப்பட்டு கொண்டு இருக்கிறோம். பேரணி நடத்தி கொண்டு இருக்கிறோம். எத்தனை இடங்களில் நீங்கள் போட்டியிட போகிறீர்கள் என்று திரும்ப, திரும்ப கேள்வி கேட்கிறார்கள். பாவம் அவர்களுக்கு இன்னும் சிறுத்தைகளை மதிப்பிட தெரியவில்லை. திருமாவளவனை மதிப்பிட செய்ய முடியவில்லை என்பது தான் என்னுடைய பார்வை.
அவர்களுக்கு புரியாது!
அவர்கள் சராசரி இயக்கவாதிகளை போல் நம்மை பார்க்கிறார்கள். அதனால் தான் இந்த கேள்விகளை கேட்கிறார்கள் என்று நான் எண்ணி கொள்கிறேன். தற்காலிகமான பயன்களுக்காக, இயக்கம் நடத்துபவர்களோடு நம்மை ஒப்பிட்டு செய்து பார்க்கிறார்கள் என்று அவர்களின் கேள்விகளை நான் பரிதாபத்தோடு தான் பார்க்கிறேன்.
@quote@தோழர்கள், அவற்றை எல்லாம் நாம் கடந்தவர்கள், அது அவர்களுக்கு புரியாது. இதை புரிந்து கொள்வதற்கே, அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நம்மை படிக்க வேண்டும்.quote
டீ, பன்
ஏதோ திருநீற்றை அழித்துவிட்டான் திருமாவளவன் என்று அரசியல் பேசுகிறார்கள். எப்படியாவது எங்களை பற்றி பேசி கொண்டே இருங்கள். எதிராகவோ, ஆதரவாகவோ எங்களை பற்றி பேசிக் கொண்டே இருங்கள். ஏனென்றால் நாங்கள் தேசத்தை திருப்பி அமைப்பதற்காக, புதுப்பித்து கட்டமைப்பதற்காக, புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக, அம்பேத்கரின் கனவை நனவாக்குவதற்காக போராடி கொண்டு இருப்பவர்கள். எங்களை வெறும் டீ, பன் கொடுத்து ஏமாற்றிவிடலாம் என்று நீங்கள் கணக்கு போடாதீர்கள்.
234 தொகுதிகள்
நாங்கள் 6 சீட் கொடுத்தோம். 8 சீட் கொடுத்தோம். அதற்கு மேல், அவர்களை நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. நாங்கள் 10 சீட்டுக்கு மேல் இவர்களுக்கு எப்போதுமே தரமாட்டோம். அது உங்கள் மதிப்பீடு.
@quote@எங்களை பொறுத்தவரை நாங்கள், 234 தொகுதிகளுக்கு இணையானவர்கள், தகுதியானவர்கள். அந்த வலிமை எங்களுக்கு உண்டு.quote இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. வெறும் தேர்தல் கணக்கில் சொல்லவில்லை. சமூக மாற்றத்தின் பார்வை அடிப்படையில் சொல்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.










மேலும்
-
சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பிற்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு; வெளியானது புது அறிவிப்பு
-
பிரதமர் மோடியை புகழ்ந்த விவகாரம்... கார்கேவின் விமர்சனத்திற்கு சசிதருர் மறைமுக பதிலடி
-
எமர்ஜென்சிக்கு எதிராக போராடியவர்களின் தியாகங்களுக்கு கவுரவம்: மத்திய அமைச்சரவை முடிவு
-
இந்தியாவில் நிற்கும் பிரிட்டீஷ் போர் விமானத்துக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க முடிவு
-
தி.மு.க., அரசின் அலட்சியத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகும் அபாயம் ; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
அமெரிக்கா தாக்குதலால் தான் போர் முடிவுக்கு வந்தது: சொல்கிறார் டிரம்ப்