ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை: அதிபர் டிரம்ப் 'அந்தர்பல்டி'

வாஷிங்டன்: ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என போர் நிறுத்தத்திற்கு, பின் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்து வந்த போது, ''ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானது அல்ல. ஆனால் தற்போதைய ஈரான் ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது?'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி இருந்தார்.
தற்போது, இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, அதிபர் டிரம்ப் தனது முடிவை மாற்றி உள்ளார். நெதர்லாந்தில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டிற்குச் செல்ல, விமான நிலையம் வந்த டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டாம்.
எல்லாம் விரைவில் அமைதியடைவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் குழப்பத்தை ஏற்படுத்தும். இவ்வளவு குழப்பங்களை நாம் பார்க்க விரும்பவில்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார். போர் நிறுத்தத்திற்கு முன், ஆட்சி மாற்றத்தை விரும்பிய டிரம்ப் தற்போது தனது முடிவை மாற்றி உள்ளார்.








மேலும்
-
பல தடைகளை தாண்டி....விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
-
காற்றில் ஊழல் செய்து அம்பலப்பட்ட ஆ. ராசா அமித் ஷா பற்றி பேசலாமா: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!
-
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை!
-
பதவிக்காக சமூக நீதியை பலி கொடுக்கும் தி.மு.க. அரசு: அன்புமணி விளாசல்