சீதோஷ்ண நிலை மாற்றம் பால் உற்பத்தி குறையும் அபாயம்
கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் சீதோஷ்ண நிலையில் திடீரென மாற்றம் காணப்படுவதால் பசுக்களில் பால் உற்பத்தி குறையும் அபாயம் உள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் கடந்த சில மாதங்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இடை இடையே லேசான வெயிலும் அடிக்கிறது. தற்போது கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டமாக உள்ளது. பனியும் குளிரும் சேர்ந்து வீசுகிறது. வெயில் இல்லை. இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பசுக்கள் மற்றும் எருமைகள் பால் உற்பத்தி குறையும் என்கின்றனர்.
இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறுகையில், 'சீதோஷ்ண நிலையில் மாற்றம் உள்ளது. குளிர் மற்றும் மழை பெய்வதால், பசுக்கள், எருமை மாடுகள் சரிவர தண்ணீர் குடிக்காது. ஒருவித மன அழுத்தத்தில் இருக்கும். எனவே பால் உற்பத்தி குறையும். கோடை காலத்திலும் இது போன்ற நிலை தான் இருக்கும். ஆனால் கோடை காலத்தில் இருப்பது போன்று பெரிய அளவில் உற்பத்தி குறையாது. சீதோஷ்ண நிலை மாறினால் மீண்டும் உற்பத்தி சீராகி விடும்', என்கின்றனர்.
மேலும்
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
-
பல தடைகளை தாண்டி....விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
-
காற்றில் ஊழல் செய்து அம்பலப்பட்ட ஆ. ராசா அமித் ஷா பற்றி பேசலாமா: நயினார் நாகேந்திரன் கண்டனம்