ஆபாசமாக நடந்த தொழிலாளி கைது

மூணாறு : வண்டிபெரியாறு அருகே மூங்கலார் எஸ்டேட் ஒன்றாம் டிவிஷனைச் சேர்ந்தவர் தொழிலாளி பன்னீர்செல்வம் 48.

இவர், அப்பகுதியில் 60ம் அடி பாலத்தின் அருகே தேயிலை தோட்டத்தில் நேற்று காலை வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் பள்ளி செல்ல பஸ்க்கு காத்திருந்த மாணவிகள் முன்பு ஆபாசமாக நடந்து கொண்டார்.

அவரது நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கூச்சலிட்டதுடன் பாதுகாப்பு கருதி பொதுமக்களை அழைத்ததால் பன்னீர்செல்வம் தப்பி ஓடிவிட்டார்.

போலீசில் மாணவிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.ஐ. ஜெயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.

Advertisement