கல்வராயன்மலையில் இன்று சிறப்பு முகாம் 

கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை பகுதியில் இன்று 'மக்களுடன் முதல்வர்' திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த செய்திக்குறிப்பு:

சங்கராபுரம் தொகுதியில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமையில் இன்று நடக்கிறது. கல்வராயன்மலை பகுதியில் தொரடிப்பட்டு ஊராட்சி முண்டியூர் அரசு ஆரம்ப மலைவாழ் உண்டு உறைவிடப்பள்ளி, வெள்ளிமலை ஊராட்சி கொட்டப்புத்துார் ஜி.டி.ஆர்., அரசு மலைவாழ் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி, மணியார்பாளையம் ஊராட்சி ஈச்சங்காடு அங்கன்வாடி மாரியம்மன் கோவில் அருகிலும், ஆரம்பூண்டி கிராம பஞ்சாயத்து அலுவலகம் அருகேயும் நடக்கிறது.

முகாமில் பொதுமக்கள் மனுக்களை வழங்கி பயன்பெறலாம்.

Advertisement