போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

திருக்கோவிலுார் :திருக்கோவிலுாரில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருக்கோவிலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு, தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.

மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்றனர்.

ஆசிரியர்கள் அருணாச்சலம், மணிகண்டன், பாலமுருகன், குணசேகரன், வெங்கடேசன் மாணவர்களை வழிநடத்திச் சென்றனர்.

Advertisement