அத்திப்பட்டியில் அடிக்கும் 'ஷாக்'

பேரையூர், : பேரையூர் தாலுகா அத்திபட்டி புது மாரியம்மன் கோயில் செல்லும் வழியில் பழுதடைந்த பழைய இரும்பு மின் கம்பத்தில் இருந்த ஒயர்களை அகற்றிவிட்டு வேறு மின்கம்பம் நடப்பட்டு அதில் ஒயர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. பழைய மின்கம்பத்தை அகற்றாமல் விட்டு விட்டனர். தற்போது காற்று காலம் என்பதால் பழைய மின்கம்பம் விழும் அபாயத்தில் உள்ளது.

இதன் அருகே செல்லும் ஒயர்கள் உரசும் போது இந்த இரும்பு மின் கம்பத்தில் மின்சாரம் பாய்கிறது. இது தெரியாமல் தொடுபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement