தி.மு.க., சேர்மன் மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு
பண்ருட்டி: பண்ருட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த இருதரப்பு தகராறில் தி.மு.க., சேர்மன் மகன் உள்ளிட்ட 5 மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் முத்துகுமார் மகன் கார்த்திக்குப்தா,32; இவர் நேற்று முன்தினம் மதியம் பண்ருட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் தனது வீட்டுமனையை பத்திரப் பதிவு செய்வது தொடர்பாக ஊழியர்களிடம் விவரம் கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த தொரப்பாடி பேரூராட்சி தி.மு.க., சேர்மன் வனஜா சுந்தரவடிவேல் மகன் ராஜ்குமார்,31; திருத்துறையூர் சுகுதேவ், தொரப்பாடி முருகன் மகன் ரவி ஆகியோர் முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்ததால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், ராஜ்குமார், கார்த்திக்குப்தா உட்பட 5 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
-
பல தடைகளை தாண்டி....விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
-
காற்றில் ஊழல் செய்து அம்பலப்பட்ட ஆ. ராசா அமித் ஷா பற்றி பேசலாமா: நயினார் நாகேந்திரன் கண்டனம்