சிறுமிகள் திருமணம் 8 பேர் மீது வழக்கு
கடலுார் : கடலுார் அருகே இரு இடங்களில் நடந்த சிறுமி திருமணம் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கடலுார் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. 10ம் வகுப்பு படித்துள்ளார். கடந்த 8ம் தேதி அவருக்கு பெற்றோர் திருமணம் செய்தனர். இதுகுறித்து சிறுமி சைல்டு ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கடலுார் மகளிர் ஊர்நல அலுவலர் தெய்வானை நடத்திய விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதியானது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தரணி, அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
இதேப் போன்று, கடலுார் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 15ம் தேதி திருமணம் நடந்தது. இதுகுறித்து கடலுார் அனைத்து மகளிர் போலீசார், புருகீஸ்பேட்டையைச் சேர்ந்த அமர்நாத், சிறுமியின் பெற்றோர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
ரேஷன் அரிசி மூட்டை ஏற்றி வந்த லாரி சேமிப்பு கிடங்கு சுவரில் மோதி விபத்து
-
101 வயது அச்சுதானந்தன் கவலைக்கிடம்; தொடர்ந்து கண்காணிக்கும் மருத்துவர்கள்
-
எங்களுடைய கூட்டணி இறுதியானது; உடைக்க நினைப்பது நடக்காது: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
நீலகிரி, கோவைக்கு 2 நாட்கள் ஆரஞ்ச்; தேனி, தென்காசிக்கு மஞ்சள் அலெர்ட்!
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்