வாகனம் மோதி இளைஞர் பலி

பரமக்குடி : பரமக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் டூவீலரில் சென்ற இளைஞர் பலியானார்.

பரமக்குடி அருகே பகைவென்றி கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் மகன் ஹரிஷ் 19.

இவர் மானாமதுரையில் உள்ள ஒரு கம்பெனியில் மெக்கானிக் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு பயிற்சி முடித்து டூவீலரில் வீடு திரும்பினார்.

தொடர்ந்து மதுரை தேசிய நெடுஞ்சாலை மேலப்பெருங்கரை பஸ் ஸ்டாப் அருகில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் டூவீலரின் பின்புறம் மோதியதில் ஹரிஷ் பலியானார். பார்த்திபனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement