403 பேருக்கு தாலிக்கு தங்கம்
மதுரை, : தமிழக சமூகநலத்துறை சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். சமூகநலத்துறை அலுவலர் காந்திமதி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் ஆதரவற்ற விதவைகளின் திருமணமாகாத மகள்களுக்கு 8 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தில் மேலும் பெண்கள் பிளஸ்2 முடித்திருந்தால் ரூ.25 ஆயிரம், பட்டப்படிப்பு முடித்திருந்தால் ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்திருந்த 403 பெண்களுக்கு, அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் தங்க நாணயங்களை வழங்கினர். 'இந்தாண்டு வரை பதிவு செய்திருந்தவர்களுக்கு தங்கம் வழங்கப்பட்டுவிட்டது' என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரேஷன் அரிசி மூட்டை ஏற்றி வந்த லாரி சேமிப்பு கிடங்கு சுவரில் மோதி விபத்து
-
101 வயது அச்சுதானந்தன் கவலைக்கிடம்; தொடர்ந்து கண்காணிக்கும் மருத்துவர்கள்
-
எங்களுடைய கூட்டணி இறுதியானது; உடைக்க நினைப்பது நடக்காது: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
நீலகிரி, கோவைக்கு 2 நாட்கள் ஆரஞ்ச்; தேனி, தென்காசிக்கு மஞ்சள் அலெர்ட்!
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
Advertisement
Advertisement