ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1.16 கோடி காணிக்கை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.1.16 கோடி வருவாய் ஹிந்து அறநிலையத்துறைக்கு கிடைத்தது.

ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்குப் பின் நேற்று கோயில் இணை ஆணையர் செல்லத்துரை முன்னிலையில் சுவாமி, அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகளை கோயில் ஊழியர்கள் சேகரித்தனர்.

இந்த காணிக்கையை கோயில் கல்யாண மண்டபத்தில் கோயில் பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, கோயில் ஆய்வாளர்கள் சிவக்குமார், முருகானந்தம் மற்றும் சிவனடியார்கள் குழு எண்ணினார்கள். இதில் ரொக்க பணம் ரூ.1 கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து19 ரூபாயும், தங்கம் 32 கிராம், வெள்ளி 4 கிலோ 950 கிராம் காணிக்கையாக கிடைத்தது.

Advertisement