படகு உரிமம் வழங்க ரூ.1600 லஞ்சம்; மீன்வளத்துறை ஆய்வாளர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மீனவரின் நாட்டுப்படகிற்கு உரிமம் வழங்குவதற்கு ரூ.1600 லஞ்சம் வாங்கிய மீன்வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக் 49, கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைசேர்ந்த மீனவர் ஒருவர் இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகிற்கான உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியை பெற ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன் வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக்கிடம் கடந்த வாரம் மனு அளித்துள்ளார்.
அதற்கு அனுமதி வழங்க ரூ.5100 வேண்டும் எனக்கேட்டுள்ளார். அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.3500 தானே என மீனவர் கேட்டார். தனக்கு தனியாக ரூ.1600 கொடுத்தால் தான் அனுமதி கிடைக்கும் என ஆய்வாளர் கூறினார்.
எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத மீனவர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அவர்கள் ஆலோசனைப்படி மீனவர் , சகுபர் சாதிக்கை நேற்று அலுவலகத்தில் சந்தித்து அவரிடம் ரசாயனம் தடவிய ரூ.1600ஐ கொடுத்தார்.
அப்பணத்தை வாங்கிய அவரை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி ஓம்சக்தி நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடந்தது.

மேலும்
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
-
பல தடைகளை தாண்டி....விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
-
காற்றில் ஊழல் செய்து அம்பலப்பட்ட ஆ. ராசா அமித் ஷா பற்றி பேசலாமா: நயினார் நாகேந்திரன் கண்டனம்