சர்வதேச அணுசக்தி முகமையுடன் இனி ஒத்துழைப்பில்லை: ஈரான்

டெஹ்ரான் : சர்வதேச அணுசக்தி முகமையுடனான ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான மசோதாவை ஈரான் பார்லிமென்ட் நேற்று அங்கீகரித்தது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இந்த சம்பவத்தை தொடர்ந்து அணுசக்தி முகமையுடனான ஒத்துழைப்பை ஈரான் நிறுத்தியுள்ளது. புதிய சட்டம் ஈரானின் அணுசக்தி நிலையங்களில் சர்வதேச அணுசக்தி முகமையின் ஆய்வுகளை தடுக்கிறது. அணுசக்தி நிலையத்தை அணுகுவதையும் தடுக்கிறது.
இது சர்வதேச அணுசக்தி மேற்பார்வையில்இருந்து குறிப்பிடத்தக்க பின்வாங்கல். ஈரானின் இந்த முடிவு அணுசக்தி நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்ட சமீபத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு நேரடி எதிர்வினையாகக் கருதப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement