அ.தி.மு.க.,வினரே கூட கூட்டணியை ஏற்கவில்லை!

பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி சேர்ந்ததை, அ.தி.மு.க., தொண்டர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. தி.மு.க., கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை; வலுவாக உள்ளது. ஆகையால், எங்கள் கூட்டணியில் பிரச்னை வரவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகின்றனர். ஆனால், அவர்கள் கூட்டணியில் தான் ஏராளமான பிரச்னைகள் உள்ளன.

அ.தி.மு.க., கூட்டணி பொருந்தாத கூட்டணியாக உள்ளது. அவர்கள் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை. முருகன் மாநாட்டில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர். அதில் ஈ.வெ.ரா., அண்ணாதுரை ஆகியோர் இழிவுபடுத்தப்பட்டனர். தி.மு.க., கொதித்தெழுந்து கண்டனம் தெரிவித்தபின், அ.தி.மு.க.,வினரும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

-நேரு

தமிழக அமைச்சர்

Advertisement