சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் வைத்தார் சுபான்ஷு சுக்லா: இந்தியர்கள் மகிழ்ச்சி

நியூயார்க் : டிராகன் விண்கலம் வாயிலாக விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய குழுவினர் இன்று( ஜூன் 26) சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்றனர். சுபான்ஷூ சுக்லா அங்கு சென்றடைந்ததற்கு இந்தியர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். நான்கு பேரையும் அங்குள்ள விஞ்ஞானிகள் 'Welcome Drink' வழங்கி வரவேற்றனர்.
நம் விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் அழைத்து வரும் 'ககன்யான்' திட்டத்தை 2027ல் செயல்படுத்த திட்டமிட்டு, பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனம், விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டது. 'ஆக்சியம் - 4' திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, 39, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோரை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
நேற்று பகல் 12:01 மணிக்கு, நான்கு பேரும் விண்வெளிக்கு புறப்பட்டனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், நாசாவுக்கு சொந்தமான கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, தொழிலதிபர் எலான் மஸ்கின், 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன் - 9' ராக்கெட் வாயிலாக, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேரையும் சுமந்து, 'ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்' விண்கலம் புறப்பட்டது. இதையடுத்து, விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார்.
சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வரும் விண்வெளியில் 28 மணி நேரம் பயணம் செய்து, பூமியில் இருந்து 400 கி.மீ., தொலைவில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அடைந்தனர். அங்கு கால் வைத்ததும், சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. ஏற்கனவே அங்கிருந்த விஞ்ஞானிகள், நான்கு பேரையும் வரவேற்றனர்.
https://www.youtube.com/shorts/fSbfd-VG3lM
அங்கு 14 நாட்கள் தங்கியிருந்து, ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர். மொத்தம் 60 ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதில், ஏழு ஆராய்ச்சிகள் இந்தியாவுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது. விண்வெளியில் பிராண வாயு, நீர் இல்லாத பகுதியில் செடிகள் வளர்ச்சி உள்ளிட்ட ஆய்வில் சுக்லா ஈடுபடுவார். மேலும், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து, நம் நாட்டின் மிக முக்கிய பிரமுகர் ஒருவருடன் அவர் பேசுவார் எனவும் கூறப்படுகிறது. விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு செல்லும் முதல் வீரர் என்ற பெருமையும் சுபான்ஷூ சுக்லாவுக்கு கிடைத்துள்ளது.
@block_Y@
விண்வெளி மையத்தில் உள்ளவர்கள் மத்தியில் பேசிய சுபான்ஷூ சுக்லா, ' சர்வதேச விண்வெளி மையத்துக்கு குழுவினருடன் வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது; இது ஒரு ஆச்சரியமான நிகழ்வு; இங்கிருந்து பூமியை பார்க்க மிகவும் அழகாக உள்ளது. ஆய்வில் ஈடுபட ஆர்வமாக உள்ளேன்,' என்றார்.block_Y


மேலும்
-
'ஆப்பரேஷன் பிகாலி' - காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி
-
கேரள வனப்பகுதியில் சிக்கித் தவித்த நிலம்பூர் புதிய எம்.எல்.ஏ.,
-
2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி: வெளியிட்டார் இ.பி.எஸ்.,
-
புலம்பெயர்ந்தோரின் நலனுக்கு 300 பஸ்கள் இயக்கம்: பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு
-
அ.தி.மு.க., எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சொல்கிறார் திருமாவளவன்
-
நடிகர் கிருஷ்ணாவை கைது செய்தது ஏன்: போலீசார் விளக்கம்