சாதனை படைத்த விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவின் தந்தை, தாய், சகோதரி நெகிழ்ச்சி பேட்டி!

லக்னோ: நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவரது வெற்றிக்காக நாங்கள் பிரார்த்தனை செய்து வருகிறோம் என இந்திய விண்வெளி வீரர் சுக்லாவின் தந்தை ஷம்பு உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
பல தடைகளைத் தாண்டி, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்கள் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. வீரர்கள் 14 நாட்கள் அங்கு ஆய்வு நடத்துகின்றனர்.
சுபன்ஷு சுக்லாவின் குடும்பத்தினர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு டிராகன் விண்கலம்

பிரார்த்தனை செய்கிறோம்!
நிருபர்களிடம் சுக்லாவின் தந்தை ஷம்பு கூறியதாவது: நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவரது வெற்றிக்காக நாங்கள் பிரார்த்தனை செய்து வருகிறோம். இது எங்களுக்கு ஒரு பெருமையான நாள். இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம், என்றார்.
மகிழ்ச்சியாக இருக்கிறது
சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா கூறியதாவது: மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். மாலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்திப்போம் என்றார்.
@block_G@
நிருபர்கள் சந்திப்பில், சுபன்ஷு சுக்லாவின் சகோதரி மிஸ்ரா கூறியதாவது: இது எனக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணம். இது மிகவும் முக்கியமான தருணம். அவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் நான் பிரார்த்தனை செய்கிறேன், என்றார்.block_G
மேலும்
-
உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...: முன்னாள் கலெக்டர் நேரடி ' ரிப்போர்ட்'
-
'ஆப்பரேஷன் பிகாலி' - காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி
-
கேரள வனப்பகுதியில் சிக்கித் தவித்த நிலம்பூர் புதிய எம்.எல்.ஏ.,
-
2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி: வெளியிட்டார் இ.பி.எஸ்.,
-
புலம்பெயர்ந்தோரின் நலனுக்கு 300 பஸ்கள் இயக்கம்: பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு
-
அ.தி.மு.க., எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சொல்கிறார் திருமாவளவன்