ஜம்முவில் திடீர் வெள்ளம் : 3 பேர் உயிரிழப்பு, 4 பேர் மீட்பு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், 3 பேர் உயிரிழந்தனர், மேலும் 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஜம்முவின் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது.மேலும் வானிலை ஆய்வு மையம், ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, அதிகாரிகள் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி, பூஞ்ச், தோடா மற்றும் கதுவா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று மேக வெடிப்பு மற்றும் பலத்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் இறந்தனர். இதுவரை 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ரஜோரியின் கலகோட் துணைப்பிரிவில் உள்ள சியால்சுய் மௌ கிராமத்தில் உள்ள ஒரு ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஷகாபத் அலி 14, மற்றும் அவரது உறவினர் சபீனா கவுசர் 11, ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
திடீர் வெள்ளத்தில் சிக்கிய சைமா 10, வை, உள்ளூர் தன்னார்வலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் ஆபத்தான பகுதிகளில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
மேலும்
-
உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...: முன்னாள் கலெக்டர் நேரடி ' ரிப்போர்ட்'
-
'ஆப்பரேஷன் பிகாலி' - காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி
-
கேரள வனப்பகுதியில் சிக்கித் தவித்த நிலம்பூர் புதிய எம்.எல்.ஏ.,
-
2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி: வெளியிட்டார் இ.பி.எஸ்.,
-
புலம்பெயர்ந்தோரின் நலனுக்கு 300 பஸ்கள் இயக்கம்: பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு
-
அ.தி.மு.க., எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சொல்கிறார் திருமாவளவன்