அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த மாட்டோம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி

டெஹ்ரான்: அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அடுத்த வாரம் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்க ஆரம்பம் முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்க மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் உண்டானது.
ஈரானின் போர்டோவ், நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. பின்னர், ஈரான், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. அமெரிக்காவின் தாக்குதலில், ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
இந்த சூழலில், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அடுத்த வாரம் ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். இது குறித்து ஈரான் செய்தி சேனலுக்கு, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியதாவது: அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அடுத்த வாரம் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்.
அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? இதனால் ஈரானுக்கு ஏதும் பலன் கிடைக்குமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அணுசக்தி நிலையங்கள் சேதம் அடைந்துள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுத திறனை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும்
-
தொடர்ந்து 2 முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
இந்திய வம்சாவளி மேயர் வேட்பாளரை இடதுசாரி பைத்தியம் என்கிறார் டிரம்ப்
-
மதுரை மீனாட்சி கோவில் கருவறை முன் அர்த்த மண்டபத்தில் வி.ஐ.பி., தரிசன ஏற்பாடு: ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு
-
டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
இந்தியாவுக்கு எதிராக சீனா, பாக்., உடன் கூட்டணியா: இல்லை என்று கூறி சமாளிக்கிறது வங்கதேசம்
-
தி.மு.க., போக்குவரத்து சங்க தேர்தல் வழக்கு: துரைமுருகன் பஞ்ச்; சண்முகத்திற்கு அடி