தலைமறைவு குற்றவாளி சிக்கினார்
வேளச்சேரி, பள்ளிக்கரணை, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 26. இவர், 2022ம் ஆண்டு கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஜாமினில் வெளிவந்த இவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். வேளச்சேரி போலீசார் அவரை தேடி வந்தனர்.
வேளச்சேரி, தரமணி சுற்றுவட்டாரப் பகுதியில், மீண்டும் கஞ்சா வியாபாரத்தில் ராஜேஷ்குமார் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி, போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், நேற்று அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ராஜேஷ்குமாரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜெகன் மூர்த்தியை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைப்பு
-
மிதவை கூண்டில் மீன் மற்றும் சேற்று நண்டு வளர்ப்பு: தமிழக அரசு நடவடிக்கை
-
136 அடியை எட்டியது பெரியாறு அணை நீர்மட்டம் - கேரளாவுக்கு எச்சரிக்கை
-
தமிழக ஆட்சியில் ராம ராஜ்ஜியம் இல்லை
-
400 கிலோ சல்பர் பறிமுதல்
-
நதிக்குடியில் பட்டா மாறுதல் செய்ய கிராம உதவியாளர் ரூ.500 லஞ்சம்
Advertisement
Advertisement