திருச்சிக்கு கடத்தி வந்த அணில் குரங்கு மீட்பு

திருச்சி:மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, நேற்று காலை திருச்சி வந்த, 'பட்டிக்' விமான பயணியரிடம், திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த உடைமைகளுக்குள், அரிய வகை விலங்கினமான அணில் குரங்கு ஒன்றை உயிருடன் கடத்தி வந்தது தெரிய வந்தது.
அரிய வகை விலங்கை மீட்ட அதிகாரிகள், அதை கடத்தி வந்தவரிடம் விசாரிக்கின்றனர்.
இதுபோன்ற அரிய வகை அணில் குரங்குகள், மருத்துவ பரிசோதனைக்காகவும், செல்ல பிராணிகளாக வளர்ப்பதற்கும், இறைச்சிக்காகவும் கடத்தப்படுகின்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement