இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்கோவிலுார், சந்தப்பேட்டை, ஜீவா நகரை சேர்ந்தவர் வெற்றிவேல், 49; இவரது மகள் தேவதர்ஷினி, 23; எம்.ஏ., பட்டதாரி. இவர் திருக்கோவிலுாரில் தனியார் கம்ப்யூட்டர் சென்டருக்கு, கடந்த 26ம் தேதி காலை 10:30 மணிக்கு சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement