3 இன்ஜி., கல்லுாரிகளில் இருந்து ரூ.1.37 கோடி ஈ.டி., பறிமுதல்
பெங்களூரு : மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டிய 'சீட்' முடக்கி வைத்த வழக்கில், மூன்று இன்ஜினியரிங் கல்லுாரிகளில் இருந்து 1.37 கோடி ரூபாயை, அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
சி.இ.டி., எனும் பொது நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் 'சீட்' கிடைக்கவிடாமல், 'சீட்'டை சட்டவிரோதமாக முடக்கி வைத்து, தலா 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த வழக்கில், கர்நாடக தேர்வு ஆணைய ஊழியர் ஹர்ஷா, 42, உட்பட 10 பேர் கடந்த ஆண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது பற்றி தெரிந்ததால், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. 25ல் பெங்களூரில் 17 கல்லுாரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'இன்ஜினியரிங் சீட் முடக்கி வைக்கப்பட்ட வழக்கில் கடந்த 25, 26ம் தேதிகளில் பெங்களூரின் 17 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சோதனை நடத்தப்பட்டது. பி.எம்.எஸ்., - ஆகாஷ் - நியூ ஹொரிசன் ஆகிய மூன்று கல்லுாரிகளில் இருந்து கணக்கில் வராத 1.37 கோடி ரூபாய் ரொக்கம், ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது' என கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சென்னை-பாங்காக் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் 146 பேர் அவதி
-
ஒடிசா ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் பலி; 50 பேர் காயம்
-
இஸ்ரேல் பிரதமர் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு டிரம்ப் எதிர்ப்பு!
-
15 வயதில் வீடு வாங்கினேன்: ஓவியர் ஷ்யாம் நெகிழ்ச்சி
-
நிரம்புகிறது மேட்டூர் அணை; நீர் வரத்து 68 ஆயிரம் கனஅடி!
-
பிரியங்கா- வருண் சந்திப்பு: ராகுலுக்கு கசப்பு