எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் இரண்டு மணி நேரம் தாமதம்
மதுரை: சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் (20627) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
எழும்பூர் - நாகர்கோவில் இடையே புதன் தவிர்த்து தினமும் 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து அதிகாலை 5:00 மணிக்கு புறப்படும் ரயில் (20627) தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக மதியம் 1:50 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது. மறுமார்க்கம் மதியம் 2:20 மணிக்கு புறப்படும் ரயில் (20628) இரவு 11:00 மணிக்கு எழும்பூர் செல்கிறது.
இந்நிலையில் எழும்பூரில் இருந்து நேற்று அதிகாலை 5:00 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 2 மணி நேரம் தாமதமாக காலை 7:00 மணிக்கு புறப்பட்டது. மறுமார்க்கத்திலும் 2 மணி நேரம் தாமதமாக மாலை 4:20 மணிக்கு எழும்பூர் புறப்பட்டுச் சென்றது. இதனால் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
ஒரு பெட்டியின் 'போகி' எனும் சக்கரத் தொகுப்பை மாற்றம் செய்ய வேண்டியிருந்ததால் நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும்
-
உத்தரகண்டில் மேகவெடிப்பு; தொழிலாளர்கள் 9 பேர் மாயம்; மீட்பு பணிகள் தீவிரம்
-
தந்தையின் ஆட்சிக்கு பின் தேர்தலில் போட்டியா? அதிபர் டிரம்ப் மகன் சூசகம்
-
லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கியவர்கள்: நேற்றைய பட்டியல்!
-
ஆய்வு செய்யாமலே ஸ்டிக்கர் ஒட்டும் அதிகாரிகள்
-
தம்பியின் இறுதிச்சடங்கிற்கு வந்த சகோதரி கார் மோதி பலி
-
3 இன்ஜி., கல்லுாரிகளில் இருந்து ரூ.1.37 கோடி ஈ.டி., பறிமுதல்