கான்கிரீட் பெயர்ந்துள்ள மின்கம்பம் பேரீஞ்சம்பாக்கத்தில் விபத்து அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்:பேரீஞ்சம்பாக்கம் சாலையோரம், கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.

வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், செரப்பனஞ்சேரி அடுத்த, காரணித்தாங்கலில் இருந்து, பேரீஞ்சம்பாக்கம் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது.

இச்சாலை வழியே, பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்த சாலையை ஒட்டி, மின் கம்பங்கள் வழியே, மின் வழித்தடம் செல்கிறது. இவற்றில் சில மின் கம்பங்கள், கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் தெரியும் நிலையில் உள்ளன.

அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மின் கம்பங்கள் விழுந்து, விபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் சென்று வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement