பாரா பேட்மிண்டன் வீராங்கனைக்கு பாராட்டு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் சிவன். இவரது மகள் நித்யஸ்ரீ. உயரம் குறைவான மாற்றுத்திறனா-ளியான இவர், கடந்தாண்டு பாரிசில் நடந்த பாராலிம்பிக் பேட்-மிண்டன், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்றார்.
நித்யஸ்ரீயை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு அர்-ஜூனா விருது வழங்கியுள்ளது. தற்போது நடந்து முடிந்த ஆசிய பாரா சாம்பியன்ஷிப் போட்டியில், பாரா பேட்மிண்டனில், 3 வெள்ளி பதக்கம் வென்று, நாட்-டிற்கு பெருமை சேர்த்துள்ள நித்யஸ்ரீயை கவுரவிக்கும் வகையில், மைஜா அறக்கட்டளை மற்றும் காங்., கட்சி சார்பில், அதன் நிறு-வனர் மைஜா அக்பர் மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, காங்., பொறுப்பாளர் நீலகண்டன் ஆகியோர், நேற்று நித்யஸ்ரீயை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து, கேடயம்,
பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு; 'இஸ்ரோ' மேலும் சாதிக்க உதவும்!
-
சண்டை முடிந்தது; சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து: தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சோகம்
-
ஈரான் அணு உலைகளை தாக்கியது இப்படித்தான்.. விளக்கமாக சொல்கிறார் டிரம்ப்
-
குழந்தையின்மையா ஷிவானி கருத்தரிப்பு மையம்
-
ப ோலீ சை மிரட்டியவர் கைது
Advertisement
Advertisement