பாரா பேட்மிண்டன் வீராங்கனைக்கு பாராட்டு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் சிவன். இவரது மகள் நித்யஸ்ரீ. உயரம் குறைவான மாற்றுத்திறனா-ளியான இவர், கடந்தாண்டு பாரிசில் நடந்த பாராலிம்பிக் பேட்-மிண்டன், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்றார்.

நித்யஸ்ரீயை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு அர்-ஜூனா விருது வழங்கியுள்ளது. தற்போது நடந்து முடிந்த ஆசிய பாரா சாம்பியன்ஷிப் போட்டியில், பாரா பேட்மிண்டனில், 3 வெள்ளி பதக்கம் வென்று, நாட்-டிற்கு பெருமை சேர்த்துள்ள நித்யஸ்ரீயை கவுரவிக்கும் வகையில், மைஜா அறக்கட்டளை மற்றும் காங்., கட்சி சார்பில், அதன் நிறு-வனர் மைஜா அக்பர் மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, காங்., பொறுப்பாளர் நீலகண்டன் ஆகியோர், நேற்று நித்யஸ்ரீயை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து, கேடயம்,
பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

Advertisement