பைக்குகள் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் உயிரிழப்பு
மயிலாடுதுறை: பைக்குகள் நேருக்கு நேர் மோதி, இரு வாலிபர்கள் உயிரிழந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், வாளவராயன் குப்பத்தை சேர்ந்தவர் கீர்த்திவாசன், 26. இவரது உறவினர், கடலுாரை சேர்ந்த அஸ்வின் முத்தையா, 23. இருவரும், 'பல்சர்' பைக்கில் நேற்று முன்தினம் மயிலாடுதுறை சென்றனர். பைக்கை அஸ்வின் முத்தையா ஓட்டியுள்ளார்.
வாளவராயன் குப்பத்தை சேர்ந்த ஆகாஷ், 21, தனுஷ், 22, ஆகிய இருவரும், 'ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளண்டர் பிளஸ்' பைக்கில் மங்கைநல்லுாரில் இருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இவ்விரு பைக்குகளும் கம்மங்கொல்லை என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதியதில், ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற மூவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அஸ்வின் முத்தையா இறந்தார். கீர்த்தி வாசன், தனுஷ் சிகிச்சையில் உள்ளனர். பெரம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; ஆவலுடன் காத்திருக்கிறோம் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பேட்டி
-
லலித் மோடியின் ரூ.10.65 கோடி இழப்பீடு தொகை மனு:சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு
-
ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட சாலை நடுவே மரங்கள்: வாகன ஓட்டிகள் திக்... திக்...
-
ஈரானில் உள்ள தமிழக மீனவர்களின் மீட்க கோரிக்கை
-
ஆள் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை
-
மருத்துவர்கள் தினத்திலாவது எங்களை நினைப்பீர்களா ? அரசு டாக்டர்கள் கேட்கின்றனர்