ஹிமாச்சலில் கொட்டியது கனமழை; 5 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டம்; 24 மணி நேரத்தில் 3 பேர் பலி!

சிம்லா: ஹிமாச்சல் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கனமழை காரணமாக, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பருவமழை காரணமாக 20 பேர் பலியாகி இருக்கின்றனர்.
இந்தியா முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. ஹிமாச்சல் மாநிலத்தில் பலத்த கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சிம்லாவில் உள்ள ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வீடு இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மாநிலம் முழுவதும் 129 சாலைகள் மூடப்பட்டுள்ளன.
சிவாலிக் நகரில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதுவரை பருவமழை காரணமாக 20 பேர் பலியாகி இருக்கின்றனர்.
காங்க்ரா, மண்டி, சோலன் மற்றும் சிர்மௌர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஹிமாச்சல், உத்தரகண்டிற்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், டில்லிக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விமான முன்பதிவு ரத்து:கார்களை திருடி வீடு திரும்பியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
-
இந்தியா தயாரித்து வரும் 'அக்னி-5' பதுங்கு குழியை அழிக்கும் ஏவுகணைகள்!
-
வீட்டில் துாங்கி கொண்டிருந்த தொழிலாளி வெட்டிக்கொலை
-
சென்னை மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி கவுன்சிலர்கள் நியமனம்: விண்ணப்பம் வரவேற்பு
-
கடமை தவறினால் கடுமையான நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
-
அத்துமீறி நடந்து கொள்ளும் போலீஸ்: மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement