கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் விற்பனை பெண் உட்பட இருவர் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வாணவரெட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ஆரியமாலா, 60; ராஜேந்திரன், 60; இருவரும் செக்கு மேட்டு தெருவில் விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்து, 25 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement