அமெரிக்க நட்புக்கு மிகவும் முக்கியத்துவம் தரும் பிரதமர் மோடி; அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடில்லி: அமெரிக்காவின் நட்புக்கு பிரதமர் மோடி மிகவும் முக்கியத்துவம் அளிப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாததால் அமெரிக்காவில் இறக்குமதியாகும் இற்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரியை அதிபர் டிரம்ப் நடைமுறைப்படுத்தி உள்ளார். அண்மையில் சீனாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது சீனா,ரஷ்யாவுடன் இந்தியா காட்டிய நெருக்கத்தைக் கண்ட டிரம்ப், மோடி தனது நண்பர், இந்தியா-அமெரிக்கா உறவு சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். அவரின் கருத்தை பிரதமர் மோடியும் வரவேற்றார்.
அதே நேரத்தில் நியுயார்க்கில் நடக்க உள்ள ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளாமல் தவிர்க்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் செல்வார் என்றும் கூறப்படுகிறது.
இந் நிலையில், அமெரிக்காவின் நட்புக்கு பிரதமர் மோடி மிகவும் முக்கியத்துவம் அளிப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் இணக்கம் கொண்டவர். அமெரிக்காவுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். தற்போதைய சூழலில் இதை தவிர்த்து வேறு எதுவும் அதிகமாக என்னால் கூற இயலாது.
இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
மேலும்
-
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சியா? கேட்கிறார் சீமான்!
-
தெலுங்கானாவில் ரூ.12,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: ஐடி நிபுணர் உட்பட 12 பேர் கைது
-
ஸ்ரேயாஸூக்கு கேப்டன் பொறுப்பு... ஆஸி., ஏ டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
-
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரவுடிகளின் ராஜ்ஜியம் ஒடுக்கப்படும்: இபிஎஸ் உறுதி
-
10ம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
-
ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கினார் சசிகலா; பண மதிப்பிழப்பு காலத்தில் வாங்கியதாக சிபிஐ எப்ஐஆர் பதிவு