நேபாளத்தில் மார்ச் 5ல் பார்லி தேர்தல்: ஜனாதிபதி அலுவலகம் அறிவிப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் அடுத்த பார்லிமென்ட் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் 5ம் தேதி நடைபெறும் என்று ஜனாதிபதி ராமசந்திர பவுடேலின் அலுவலகம் அறிவித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற போராட்டங்களால் பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து அரசியல் நிச்சயமற்ற தன்மை நீடித்து வந்தது. இந்த நிலையில் போராட்டக்காரர்கள் குழு ஆலோசனையின்படி,இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி 73, பதவியேற்றார்.
இதை தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமரின் பரிந்துரையின் பேரில் பிரதிநிதிகள் சபையைக் கலைத்த ஜனாதிபதி பவுடேல், அடுத்த பார்லிமென்ட் தேர்தல் 2026, மார்ச் 5ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிகாரத்தை ருசிக்க வரவில்லை: நேபாள பிரதமர் திட்டவட்டம்
-
டில்லி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் கோளாறு: பயணிகள் 151 பேர் அவதி
-
நேரு மக்களுக்கு ஏற்படுத்திய காயங்கள் ஆறவில்லை: அசாமில் பிரதமர் மோடி பேச்சு
-
மலிவான அரசியல் செய்பவர்களுக்கு பதிலளிக்க அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
-
விஜய் வரலாற்றைப் படிக்க வேண்டும்; சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்!
-
மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
Advertisement
Advertisement