கண்டெய்னர் மோதி மரம் முறிந்தது கோரிமேடு சாலையில் 'டிராபிக்ஜாம்'

புதுச்சேரி : புதுச்சேரி - கோரிமேடு சாலையில், கண்டெய்னர் லாரி மோதியதில் மரக்கிளை முறிந்து விழுந்ததால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
கோரிமேட்டில் இருந்து நேற்று இரவு 7:45 மணிக்கு கே.ஏ.02-ஏ.ஜி-0501 பதிவெண் கொண்ட கண்டெய்னர் மினிலாரி ராஜிவ் சதுக்கத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. தட்டாஞ்சாவடி கஸ்துாரிபாய் நகர் அருகே வந்தபோது, மினிலாரியில் இருந்த கண்டெய்னர் சாலையோரத்தில் இருந்த மரத்தின் கிளையில் மோதியது. அதில் மரக்கிளை முறிந்து, கண்டெய்னர் மீது விழுந்தது.
இதனால், மினிலாரியை அங்கிருந்து நகர்த்த முடியாததால் புதுச்சேரி மார்க்கத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்து சென்ற, அவ்வழியே வந்த வாகனங்களை மாற்று வழியில் திருப்பிவிட்டனர். இதனால், திண்டிவனம் மார்க்க சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், கண்டெய்னர் மீது விழுந்த மரத்தை அடியோடு வெட்டி அகற்றியதை தொடர்ந்து இரவு 8:45 மணிக்கு போக்குவரத்து சீரானது.
மேலும்
-
வக்ப் சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
-
பாக்., வீரர்களுக்கு கை குலுக்காமல் 'கெத்து' காட்டிய இந்திய வீரர்கள்: வெற்றியை ராணுவத்திற்கு சமர்பித்து பேச்சு
-
கொடை, ஊட்டியில் விபத்து 17 சுற்றுலா பயணியர் காயம்
-
அதிமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்த பேசினேன்: புரிய வேண்டியவர்களுக்குப் புரியும் என்கிறார் செங்கோட்டையன்
-
ஜார்க்கண்டில் என்கவுன்டர்: ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
வார தொடக்கத்தில் சற்று சரிந்த தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.81,680!