அக்.14ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை!

8


சென்னை: தமிழக சட்டசபை அக்டோபர் 14ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:
அக்டோபர் 14ம் தேதி சட்டசபை காலை 9.30 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கும். முதல் நாளில், மறைவுற்ற முன்னாள் சட்டசபை எம்எல்ஏக்கள் குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். வால்பாறை தொகுதி எம்எல்ஏ கந்தசாமி மறைவு குறித்தும், உயிரிழந்த பிரபலங்கள் குறித்தும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.



அக்டோபர் மாதம் 14ம் தேதிக்கு முன்னதாக, ஏதாவது ஒரு தேதியில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு, சட்டசபை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்படும். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

@block_P@

கேள்வியும், பதிலும்!

நிருபர் கேள்வி: தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்தியாவிலேயே அரசியல் செய்யும் சபாநாயகர் ஒருவர் என்றால் அது அப்பாவு தான் என கூறியுள்ளாரே?



அப்பாவு பதில்: அரசியலில் ஓட்டு வாங்கி தானே எம்.எல்.ஏ ஆகி, சபாநாயகர் ஆகி இருக்கிறோம்.block_P

Advertisement