இரு தரப்பு மோதல் 7 பேர் மீது வழக்கு பதிவு
கள்ளக்குறிச்சி : வாணாபுரம் அருகே இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட முன்விரோத தகராறில் 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாணாபுரம் பொற்பாலம்பட்டு சேர்ந்தவர் புஷ்பநாதன்,74; இவரது சகோதரர் அம்புரோஸ்,60; இருவருக்கும் இடையே பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 2 ம் தேதி தண்ணீர் இறைப்பது தொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இது தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார் அம்புரோஸ், ஆரோக்கியராஜ், ரூபன் பிரேம்குமார், மற்றொரு தரப்பில் புஷ்பநாதன், ஆரோக்கியதாஸ், தனுஷ் ஷாமேரி மற்றும் சிறுவன் உட்பட மொத்தம் 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தை இருண்ட சூழலில் கொண்டு வந்து நிறுத்திய முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
-
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
-
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
-
அமைதி காக்கும் பணியில் சிறப்பு: இந்திய வீரர்களுக்கு ஐநா அமைப்பு பாராட்டு
-
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
Advertisement
Advertisement