அமைதி காக்கும் பணியில் சிறப்பு: இந்திய வீரர்களுக்கு ஐநா அமைப்பு பாராட்டு

அபேய்: தெற்கு சூடான் மற்றும் சூடான் இடையிலான எல்லைப் பகுதியில் இருக்கும் அபேய் நகரில் இந்திய அமைதிப்படையினர் ஆற்றியபணிக்காக ஐநா அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
சூடான் உள்நாட்டு போருக்கு பிறகு, சூடான் மற்றும் தெற்கு சூடான் இடையில் இருக்கும் அபேய் என்ற பகுதிக்கு சிறப்பு நிர்வாக அந்தஸ்து வழங்கப்பட்டது. இதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்தப் பகுதிக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை ஐநாவின் (United Nations Interim Security Force for Abyei (UNISFA)) ஏற்றுக்கொண்டுள்ளது.

1950 முதல் இதுவவரை இதுவரை உலகம் முழுவதும் அமைதி காக்கும் பணிகளுக்காக 2,90,000 வீரர்களை இந்தியா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களில் 180 பேர் பணியின் போது வீரமரணம் அடைந்துள்ளனர். தற்போது 9 முதல் 11 நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த 5 ஆயிரம் வீரர்கள் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அபேய் நகரில் அமைதி காக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்தியாவை சேர்ந்த அமைதிப்படை வீரர்களை அங்கீகரித்து பாராட்டியதுடன் பதக்கம் வழங்கப்பட்டது. இதற்காக நடந்த விழாவில் UNISFA அமைப்பின் தலைவர் கமாண்டர் ராபர்ட் யாவ் அப்ரம் பங்கேற்று அணிவகுப்பை பார்வையிட்டதுடன், வீரர்களை பாராட்டினார்.
வாசகர் கருத்து (3)
மணிமுருகன் - ,
06 அக்,2025 - 00:18 Report Abuse

0
0
Reply
Varadarajan Nagarajan - டெல்டாக்காரன்,இந்தியா
05 அக்,2025 - 20:58 Report Abuse

0
0
Reply
RAMESH KUMAR R V - ,இந்தியா
05 அக்,2025 - 17:06 Report Abuse

0
0
Reply
மேலும்
-
அணு ஆயுத ஒப்பந்தம்; ரஷ்ய அதிபர் புடினின் முடிவுக்கு அதிபர் டிரம்ப் வரவேற்பு
-
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 6 பேர் பலி
-
காசா அமைதி திட்டத்தில் மாற்றம் செய்ய அவசியமில்லை; அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
-
அரியமான் கடற்கரையில் தேசிய அளவில் நீர் சாகச போட்டிகள்
-
மாணவர்கள் தினமும் புத்தகம் வாசிப்பது கட்டாயம்; சட்டக்கல்வி இயக்குநர் பேச்சு
-
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
Advertisement
Advertisement