ரவுடி தற்கொலை
பம்மல்: பம்மல் அடுத்த அனகாபுத்துார் பகுதியை சேர்ந்தவர் குமரகுரு, 34. சரித்திர பதிவேடு குற்றவாளி.
போதை பழக்கத்திற்கு அடிமையான குமரகுரு, தன் கையை பிளேடால் அடிக்கடி கிழித்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்.
நேற்று முன்தினம் இரவு, தன் தாய் செல்லக்கனியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதனால், அருகில் உள்ள இரண்டாவது மகன் வீட்டிற்கு சென்ற செல்லக்கனி, இரவு அங்கேயே தங்கினார். நேற்று காலை, செல்லக்கனி வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் அறையில் குமரகுரு துாக்கிட்டு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், குமரகுரு உடலை பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'பஞ்ச துவாரகா' சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
-
ரயில் நிலையத்தில் 3 சிறுவர்கள் மீட்பு
-
'புகையிலை இல்லாத பகுதி' பள்ளிகள் அருகே எல்லைக்கோடு
-
பிரசன்ன வரதராஜர் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்
-
கூட்டணி குறித்து அன்புமணி விரைவில் அறிவிப்பார்: ஒருங்கிணைப்பாளர் தகவல்
Advertisement
Advertisement