48 மணி நேரத்தில் புதிய பிரதமரை நியமிப்போம்: பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு

பாரீஸ்: 48 மணி நேரத்தில் புதிய பிரதமரை நியமிக்க முடிவு செ ய்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அலுவலகம் அறிவித்துள்ளது.

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் செபஸ்டியன் லெகுர்னு, அரசியல் நெருக்கடி காரணமாக பதவியேற்ற சில வாரங்களில் பதவி விலகினார். இது கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

அவரது பதவி விலகல் கடிதத்தை அதிபர் இமானுவேல் மேக்ரானும் ஏற்றுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து 48 மணி நேரத்திற்குள் புதிய பிரதமரை நியமிப்பதாக அதிபர் அலுவலகம் அறிவித்தது. பிரான்ஸ் நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் 6வது பிரதமரைத் தேடும் பணியில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மீண்டும் ஈடுபட்டுள்ளார்.

Advertisement