குடியிருப்பு பகுதியில் நடமாடும் காட்டு மாடு

மூணாறு:குடியிருப்பு பகுதியில் காட்டு மாடு நிரந்தரமாக நடமாடுவதால் வீடுகளை விட்டு வெளியில் வர தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.
மூணாறு பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் காட்டு யானைகள் சுற்றித் திரியும் நிலையில், அதற்கு ஏற்ப காட்டு மாடுகளும் நடமாடி வருகின்றன.
குறிப்பாக மூணாறு அருகே நல்லதண்ணி எஸ்டேட், ஐ.டி.டி. டிவிஷனில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் காட்டு மாடுகள் நிரந்தரமாக நடமாடி வருகின்றன.
அவை காலை வேலையில் நடமாடுவதால் பணிக்கு செல்லவும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவும் இயலாமல் தொழிலாளர்கள் திண்டாடும் நிலையில், சில நேரங்களில் வீடுகளை விட்டு வெளியில் வர அஞ்சுகின்றனர்.
ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக குடியிருப்பு பகுதியில் நடமாடும் காட்டு மாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
மேலும்
-
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல் முற்றியது: காபூல் மீது பாக்., விமானப்படை குண்டு வீச்சு
-
நாட்டின் முதல் புல்லட் ரயில் ஆக.2027ல் இயக்கம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,380 சரிவு; ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை
-
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-ரிக்டரில் 7.6 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா என எதிர்பார்க்கும் உலக நாடுகள்
-
வடமாநில தொழிலாளி கொலை? நண்பரிடம் தீவிர விசாரணை