இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்: 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

1


சென்னை: நீலகிரி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (அக் 11) ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நீலகிரி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (அக் 11) ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வரும் அக் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* மயிலாடுதுறை

* நாகப்பட்டினம்

* திருநெல்வேலி

* தென்காசி

* மதுரை

* சிவகங்கை

* திண்டுக்கல்

* திருப்பூர்

* கோவை

* கரூர்

* திருச்சி

* நாமக்கல்

* சேலம்

* ஈரோடு

நாளை (அக் 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* கோவை

* சேலம்

* நாமக்கல்

* திருச்சி

* திண்டுக்கல்

* தேனி

* மதுரை

* தென்காசி

* திருநெல்வேலி

நாளை மறுநாள் (அக் 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* கோவை

* ஈரோடு

* திருப்பூர்

* சேலம்

* நாமக்கல்

* திண்டுக்கல்

* தேனி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement