கன மழையால் கூரை வீடு சுவர் சேதம்
சங்கராபுரம் : பூட்டை கிராமத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கூரைவீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு துவங்கி 10:00 மணி வரை இடியுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழை காரணமாக சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி லட்சுமி என்பவருக்கு சொந்தமான கூரைவீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த கோவிந்தசாமி, லட்சுமி எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர்.
தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் திவ்யா, வி.ஏ.ஓ., ஆகியோர் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹார் தேர்தல் விறுவிறு; 57 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் நிதிஷ்குமார்
-
7 மணி நேரம் விஜய் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
மும்பை அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி: 12 மணி நேரம் பஸ்சில் காத்திருந்த 500 மாணவர்கள்
-
கரூர் சம்பவத்தை கண்டித்து கருப்பு பட்டையுடன் சட்டசபைக்கு வந்த அதிமுகவினர்!
-
அண்ணாமலை பல்கலை. மாணவர்களுக்கு உதவித்தொகையை உடனே வழங்கவேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
-
அரட்டை செயலியை பயன்படுத்துங்க: சுப்ரீம் கோர்ட் அறிவுரை
Advertisement
Advertisement