ராஷ்மிகா, சஹாஜா வெற்றி: சென்னை ஓபன் முதல் சுற்றில்
சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் ராஷ்மிகா, சஹாஜா வெற்றி பெற்றனர்.
சென்னையில், பெண்களுக்கான 'டபிள்யு.டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, மாயா ரேவதி மோதினர். ஒரு மணி நேரம், 9 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ராஷ்மிகா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் சஹாஜா, இந்தோனேஷியாவின் பிரிஸ்கா மோதினர். அபாரமாக ஆடிய சஹாஜா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் 1-6, 2-6 என குரோஷியாவின் டோனா வெகிக்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்ற முதல் சுற்று போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் அரினா ரோடியோனோவா, கிம்பர்லி பிர்ரெல், ஸ்டிரோம் ஹன்டர், சீனதைபேயின் ஜோனா கார்லாண்ட், பிரான்சின் டயான் பாரி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
மேலும்
-
அ.தி.மு.க.-பா.ஜ.வுடன் கூட்டணி இல்லை: த.வெ.க. திட்டவட்டம்
-
திருச்சியில் கொள்முதல் செய்தும் சாலையில் தேங்கி கிடக்கும் நெல்
-
2 மாதத்தில் இடுக்கி அணையை 27,700 சுற்றுலா பயணியர் ரசிப்பு
-
பசும்பொன்னில் மூன்றடுக்கு பாதுகாப்பு; வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
-
ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டுகள் 30 மாவட்டங்களில் இல்லை
-
மின்சாரம் தாக்கி பலி: ரூ.10 லட்சம் இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு