நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

1


சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.,07) 9 மாவட்டங்களிலும், நாளை (நவ.,08) 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று (நவ., 07) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* தூத்துக்குடி

* ராமநாதபுரம்

* விருதுநகர்

* சிவகங்கை

* மதுரை

* தேனி

* திண்டுக்கல்

* திருச்சி

* நாமக்கல்

நாளை (நவ., 08) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* தென்காசி

* தூத்துக்குடி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

நாளை மறுநாள் (நவ., 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement