பினாமி பெயரில் பி.எப்.ஐ., அறக்கட்டளை வெளிநாட்டு வசூல் குறித்து விசாரணை
சென்னை: பினாமிகள் பெயரில், பி.எப்.ஐ., எனும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' நிர்வாகிகள் அறக்கட்டளைகள் துவங்கி, வெளிநாடுகளில் இருந்து நிதி வசூலித்தது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள், ரகசிய செயற்பாட்டாளர்கள், வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் நிதி திரட்டி உள்ளனர்.
சதி திட்டம் தீட்டவும், பயங்கரவாத செயலுக்கும் நிதி திரட்டியது தெரியவந்தது.
பி.எப்.ஐ.,யின் அரசியல் அமைப்பு தான், எஸ்.டி.பி.ஐ., என்பதும், இந்த இரண்டு அமைப்புகளுக்கும் நடந்த பண பரிமாற்றம் குறித்த ரகசிய டைரியையும், பறிமுதல் செய்துள்ளோம்.
எஸ்.டி.பி.ஐ., அமைப்புக்கு வேட்பாளர் தேர்வு, பொது நிகழ்ச்சிகளை நடத்துதல், உறுப்பினர் சேர்க்கைக்கு, பி.எப்.ஐ., தான் பணம் கொடுத்து உள்ளது. இந்த அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து, சமூக சேவைக்கு என, பணம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
மேலும், பி.எப்.ஐ., சொத்துக்கள் பெரும்பாலும் அறக்கட்டளை பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., அமைப்பினர், சிமி என்ற ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளனர்.
இந்தியாவின் பல பகுதிகளில், உடற்பயிற்சி கூடங்கள் என்ற பெயரில் ஆயுத பயிற்சியும், தாக்குதல் நடத்துவற்கான பயிற்சிகளும் அளித்துள்ளனர்.
இவர்கள், கேரள மாநிலத்தில் நடத்தி வந்த எட்டு அறக்கட்டளைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன; 129 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன.
தொடர் விசாரணையில், பி.எப்.ஐ., நிர்வாகிகள், தமிழகத்திலும் பினாமிகள் பெயரில் அறக்கட்டளைகள் துவங்கி, பயங்கரவாத செயலுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டியது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, ஏற்கனவே கைதான பி.எப்.ஐ., நிர்வாகிகள், 28 பேருடன் தொடர்பில் இருந்தவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளன.
இலவச கல்வி, மருத்துவ வசதிகள் செய்து தருவதுபோல முகாம்கள் நடத்தி, அதை ஆவணப்படுத்தி, வெளிநாடுகளுக்கு அனுப்பி, பணம் பெற்றுஉள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (6)
GMM - KA,இந்தியா
11 நவ,2025 - 07:56 Report Abuse
அறக்கட்டளை வெளிநாட்டு நிதி மத்திய நிதித்துறையின் ஒரு பிரிவு மூலம் பராமரிப்பு கண்காணிக்க வேண்டும். 1 சதவீதம் வரி விதிக்க வேண்டும். எதற்கும் வரி விலக்கு கூடாது. மத மாற்றம் சட்டம் மூலம் தடுக்க வேண்டும். நிதியுதவி தானே குறையும். பெற்ற நிதியின் செலவு விவரம் பெற்று, மற்ற நிதி விடுவிக்க வேண்டும். உள்நாட்டில் ஆபத்தான சில அறக்கட்டளை அமைப்புகள் உள்ளன. 0
0
Reply
naranam - ,
11 நவ,2025 - 07:26 Report Abuse
தடை செய்தல் மட்டும் போதாது.. சுத்தமாக இவனுங்களை ஒழித்துக் கட்டவேண்டும். நம்நாட்டில் வாழும் தீவிரவாதக் குடிமகன்களையும் உடனடியாகக் தீர்த்துக்கட்ட வேண்டும். 0
0
Reply
Krishna - bangalore,இந்தியா
11 நவ,2025 - 07:20 Report Abuse
Ban/Cancel All Conversions Out of Native Hinduism wef 15Aug1947. Arrest-Defame-Punish All Anti Nation Anti Native People Conspirators 0
0
Reply
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
11 நவ,2025 - 06:56 Report Abuse
உன்னைபோல தற்குறிகள் இந்த நாட்டில் உள்ளவரை ஊழல் திமுக காங்கிரஸ் போன்றவை வளரும் 0
0
Reply
Oviya vijay - ,
11 நவ,2025 - 06:39 Report Abuse
என்கவுன்ட்டர் ஒன்றே வழி... 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
11 நவ,2025 - 06:08 Report Abuse
பெரும்பான்மை ஹிந்து வாக்குகளைக் கவர மூர்க்க இயக்கங்களை ஒரேயடியாகத் தடையும் செய்ய மாட்டோம் ..... மூர்க்க ஆபத்தை பெரும்பான்மையினர் தொடர்ந்து உணர்ந்தால்தான் எங்களுக்கு வாக்குகள் குவியும் ..... இப்படிக்கு ஒன்றிய பாஜக .... 0
0
Reply
மேலும்
-
டில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை
-
பீஹாரில் 2ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியது; 1,302 வேட்பாளர்கள் போட்டி
-
இந்தியாவின் வரி குறைக்கப்படும்: அதிபர் டிரம்ப்
-
இ.கம்யூ., தனித்தே 20 எம்.பி.,க்களை பெறும்
-
கரூர் பிரசார கூட்டம் :சி.பி.ஐ., தீவிரம்
-
பஸ்சில் அவமதிப்புக்கு எதிராக போராடிய பூஜாரிக்கு பாராட்டு
Advertisement
Advertisement