லஞ்ச வழக்கில் துணை தாசில்தார் வி.ஏ.ஓ., கைது
கோபி: ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, மொடச்சூர் அருகே கே.ஏ.எஸ்., நகரைச் சேர்ந்த ஜெயா, 45, தன் தாய் வகையறாவுக்கு உண்டான சொத்தில், தன் தாய் உள்ளிட்டோர் பெயரை பட்டாவில் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பித்தார்.
கோபி தாலுகா மண்டல துணை தாசில்தார் மணிமேகலை, 43, என்பவர், 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தர விரும்பாத ஜெயா, ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
துணை தாசில்தார் சொன்னபடி, லஞ்ச பணத்தை கலிங்கியம் 'ஆ' கிராமம் வி.ஏ.ஓ., சசிக்குமார், 33, அலுவலகத்தில் வைத்து கொடுத்த போது, நேற்று மாலை போலீசார் அவரை கைது செய்தனர்.
இதற்கு உடந்தையான மணிமேகலையும் கைது செய்யப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காலாவதியான போலீஸ் காரும், காப்பீடும் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய பரிதாபம்
-
மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
-
வக்கீல்கள் புடைசூழ வந்த எம்.பி.,க்கு நீதிபதி கண்டிப்பு
-
நண்பர்களுடன் தகராறு: வாலிபர் கொலை
-
அரசு ஊழியர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வங்கியில் ஊதிய கணக்கு உள்ளதால் பயன்
-
பஸ் படியில் பயணித்த மாணவர் பள்ளி வேன் மீது உரசியதில் பலி
Advertisement
Advertisement