குடிக்க தண்ணீர் கேட்பது போல் வெள்ளி குத்துவிளக்கு திருட்டு
சென்னை: மயிலாப்பூர் கேசவப்பெருமாள் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜன், 83. இவர், கடந்த 12ம் தேதி, மனைவி கோவிலுக்குச் சென்றதால், வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, தர்மராஜன் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது, தர்மராஜன் தண்ணீர் எடுத்து வர சமையல் அறைக்கு சென்ற போது, பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி செம்பு ஆகிய பொருட்களை திருடி, மர்மநபர் தப்பினார்.
இதுகுறித்து, மயிலாப்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவில், தர்மராஜன் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முத்து, 49, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிஜிட்டல் கைது மூலம் ரூ.33 கோடி மோசடி: பெங்களூரு பெண்ணுக்கு ஏமாற்றம்
-
இன்று தொடங்கும் துபாய் விமான கண்காட்சி; இந்திய விமானப்படை பங்கேற்பு
-
பிளின்த் பீம், கிரேடு பீம், கிரவுண்ட் பீம்; வேறுபாடு என்ன? கட்டுமான செலவை குறைக்க பொறியாளர்கள் ஆலோசனை
-
சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு
-
வங்கதேசத்தை விட்டு வெளியேறியது வேதனை; இன்று தீர்ப்பு வெளியாகும் நிலையில் ஷேக் ஹசீனா உருக்கம்
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை குறைவு; ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை
Advertisement
Advertisement