பரமக்குடியில் வ.உ.சி., 89வது நினைவு தினம்
பரமக்குடி: பரமக்குடியில் வ.உ.சி., 89 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. காட்டுப்பரமக்குடியில் உள்ள முழு உருவ வெண்கல சிலைக்கு அனைத்து வெள்ளாளர் மகாசபை நிறுவனத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்து மாலை அணிவித்தார்.
சபை மற்றும் வ.உ.சி., மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், குரு சுப்பிரமணியம், சவரி முத்து, ராமநாதன், மகேஸ்வரன், கோவிந்தன், செந்தில், முனியாண்டி, ரமேஷ்பாபு, நாகேந்திரன், கணபதி, பன்னீர்செல்வம், கண்ணன், குமரேசன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் பள்ளியில் உள்ள வ.உ.சி., சிலைக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் அஞ்சலி செலுத்தி சுதந்திரத்திற்கு போராடிய அவரைப் பற்றி நினைவு கூர்ந்தனர். பின்னர் நிர்வாகிகள் திருநெல்வேலியில் உள்ள வ.உ.சி., மணிமண்டபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பன்றி வளர்ப்போருக்கு ஆணையர் எச்சரிக்கை
-
போக்குவரத்து போலீஸ்காரராக மாறிய பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார்
-
குடிநீர் கசிவை தடுக்க திட்டம் 'புளூ போர்ஸ்' இன்று துவக்கம்
-
காங்., வி.சி., ஆர்வம் திட்டக்குடியில் களம் இறங்கப்போவது யார்?
-
பஸ் ஊழியர்கள் ஊதிய திருத்தம் விரைவில் ஆலோசனை கூட்டம்
-
மழையால் வெளி மாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி பாதிப்பு
Advertisement
Advertisement