எரிபொருள் இறக்குமதிக்கு இந்தியா ரூ.20 லட்சம் கோடி செலவு: மத்திய அமைச்சர்

2


புதுடில்லி: '' புதைவடிவ எரிபொருள் இறக்குமதிக்கு இந்தியா 20 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்கிறது,'' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

காற்று மாசு



டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: நான் டில்லியில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொற்று ஏற்பட்டது. டில்லி முழுவதும் மாசுபாடு காணப்படுகிறது. நான் போக்குவரத்து அமைச்சர். காற்று மாசு ஏற்பட 40 சதவீத காரணம் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட புதைவடிவ எரிபொருட்கள் தான் காரணம்.

செலவு



புதைபடிவ எரிபொருளுக்காக ஆண்டுதோறும் 20 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்கிறோம். இது என்ன வகையான தேசபக்தி. இந்த நாட்டில் புதைபடிவ எரிபொருளுக்காக 20 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்து மாசுபாட்டை இறக்குமதி செய்கிறோம். நம்மால் ஒரு மாற்று இந்தியாவை உருவாக்க முடியாதா?

விவசாயிகளின் பங்கு



உள்நாட்டில் சுத்தமான மாற்று எரிபொருளை தயார் செய்யும் திறன் இந்தியாவுக்கு உண்டு. இதில் விவசாயிகளின் பங்கு அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் பணி இனிமேல் உணவு உற்பத்தியுடன் முடிவடைந்துவிடாது. விவசாயிகள், எரிசக்தி உற்பத்தியாளராக முடியும். எரிபொருள் வழங்குபவராகவும், விமான எரிபொருளை வழங்குபவராகவும் முடியும். தற்போது அது நடந்து வருகிறது.

இவ்வாறு கட்கரி கூறினார்.

Advertisement