பழைய அடிமை, புதிய அடிமை என்று பூடகமாக பேசும் முதல்வர்: நடிகர் விஜய் காட்டம்
சென்னை: '' பழைய அடிமை, புதிய அடிமை என்று பூடகமாகப் பேசி, யார் மீதோ கல்லெறிவதாக எண்ணி களிப்புறுகிறார், முதல்வர். பாவம், அவர்கள். தங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன் தான் நின்று பேசுகிறோம் என்பதை ஏனோ மறந்து விட்டனர்'' என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நம்மை முடக்க நினைத்தவர்கள், மக்கள் நம்முடன் முன்பை விட அதிகமாக, அதிகப் பாசத்துடன் ஆணித்தரமாக அணிவகுத்து நிற்பதைப் பார்த்து விழிபிதுங்கி, முனகத் தொடங்கினர். நம்மீது அவதூறு பூசலாம் என்ற நப்பாசையில், தங்கள் முகமூடியைத் தாங்களே கழற்றிக்கொண்டனர்.
முதல்வரே பழைய அடிமை, புதிய அடிமை என்று பூடகமாகப் பேசி, யார் மீதோ கல்லெறிவதாக எண்ணிக் களிப்புறுகிறார். தங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன்புதான் நின்று பேசுகிறோம் என்பதை ஏனோ மறந்துவிட்டனர்.
குறைந்தபட்ச செயல்திட்டம் என்றெல்லாம் மக்களைக் குழப்பி, 1999 முதல் 2003 வரை தாங்கள் அடைக்கலமாகி, முதல் அடிமையாக இருந்து, தமிழகத்தில் தாமரை மலருக்குத் தரிசனம் செய்து தாங்கள் இருந்த இடத்தை மறைக்க முடியாமல், மனத்தில் இருந்ததை ஒருவித மறதியால் பேசி இருக்கலாமோ? காரணம் எதுவாயினும் கொண்டையை மறைக்க இயலாமல் குட்டு வெளிப்பட்டுவிட்டது.
இளைஞர் பெருங்கூட்டமும் பெண்கள் பெரும்படையும் நம்முடன் மனத்தளவிலும் உறுதியாக இணைந்துவிட்டனர். அதை ஆழமாக அறிந்ததால் தான் அவர்களை விவகாரமாகப் பேச வைக்கிறது.
அவர்களின் ஏசுதலையும் ஏகடியம் பேசுதலையும் புறந்தள்ளி மக்களுடன் மக்களாக இணைந்து களமாடுவதில்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் என்றாலே தகுதி மிக்க, தரம் மிக்க, ராணுவக் கட்டுப்பாடு மிக்க, கண்ணியம் மிக்க அரசியல் போர்ப் பெரும்படை என்பதைத் தரணிக்கு உணர்த்த வேண்டும். உணர்த்தியே ஆக வேண்டும்.
நம் அரசியல் மற்றும் கொள்கை எதிரிகளின் நரித் தந்திரச் சூழ்ச்சிகளை ஆழமாகப் புரிந்து, உணர்ந்து மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் நாம், எப்போதும் களத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். செயல்மொழியே நமது அரசியலுக்கான தாய்மொழி. அதை மனத்தில் கொண்டு, தொடர்ந்து களமாடுங்கள். தொய்வின்றிக் களமாடுங்கள். இப்போதே துரிதமாகக் களமாடுங்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.
நடிகர் ஜோசேப்பு விஜய் சந்திரசேகர் அவர்களே பேச்சு மட்டும் தான் ப்ளாஸ்ட் ப்ளாஸ்ட் செயல்
எல்லாம் புஷ் புஷ் தான் .....
41 பேர் இறந்தவுடன் அவர்களுக்கு உதவ கூட செல்லாமல் எங்கே தன்னை கைது செய்து விடுவார்களோ என்று எண்ணி தலை தெறிக்க ஓடிய ஒரு பயந்தான்கொள்ளி தான் இந்த பனையூர் பண்ணையார்
கருவூர் சம்பவத்திற்கு பின் தீபாவளி கொண்டாடாதீர்கள் என்று சொன்னான் செத்தது யாரும் இவனைபோன்ற கிறிஸ்ட்டின் கிடையாது இப்போது கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் என்கிறான் இவனால் இறந்த இந்துக்களின் தர்மன் இவனுக்கும் இவனைப்போன்ற க்ரிஸ்டீன்களுக்கும் கிடையாது. இந்துமத நம்பிக்கையாளர்களே இவனுடைய சினிமா வசனம் வேறு இவனுடைய நம்பிக்கை செயல்பாடு வேறு .
சூப்பருங்கோ ...... எழுதிக்கொடுத்தது யாரு ???? புச்சி யா
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடக்க ஆரம்பித்த உடன் புதிய அடிமை என்பது உங்கள் பேச்சில் ஏற்பட்ட மாற்றம் நன்றாகவே தெரிகிறதுமேலும்
-
அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு; விசாரணை தீவிரம்
-
ஐரோப்பாவை சேர்ந்த 5 பேருக்கு டிரம்ப் தடை: அமெரிக்காவுக்கு பிரான்ஸ், ஜெர்மனி கண்டனம்
-
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் 87 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும்; முதல்வர் ரேவந்த் ரெட்டி
-
பவுலிங் செய்ய விருப்பம்: ஷைபாலி வர்மா 'ரெடி'
-
முதல்வர் பேச்சை இயேசுவே ஏற்க மாட்டார்: தமிழிசை
-
உலக விளையாட்டு செய்திகள்