பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது
மரக்காணம்: பட்டா மாற்றம் செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, வி.ஏ.ஓ.,வை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், முன்னுாரை சேர்ந்தவர் சுரேந்தர், ஆட்டோ ஓட்டுநர். குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். சில மாதங்களுக்கு முன் ஆலங்குப்பத்தில், தன் மனைவி பெயரில், வீட்டு மனைக்கு பட்டா மாற்றம் செய்ய கணினி மூலம் பதிவு செய்து இருந்தார்.
ஆனால், பட்டா மாற்றம் செய்யாமல், ஆலங்குப்பம் வி.ஏ.ஓ., சரவணன் தாமதம் செய்து வந்தார். அவர், சுரேந்தரிடம், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இந்த விவரத்தை சுரேந்தர், விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார், சுரேந்தரிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை சரவணனிடம் மதியம் சுரேந்தர் கொடுத்தார். பணத்தை பெற்ற சரவணனை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு; விசாரணை தீவிரம்
-
ஐரோப்பாவை சேர்ந்த 5 பேருக்கு டிரம்ப் தடை: அமெரிக்காவுக்கு பிரான்ஸ், ஜெர்மனி கண்டனம்
-
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் 87 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும்; முதல்வர் ரேவந்த் ரெட்டி
-
பவுலிங் செய்ய விருப்பம்: ஷைபாலி வர்மா 'ரெடி'
-
முதல்வர் பேச்சை இயேசுவே ஏற்க மாட்டார்: தமிழிசை
-
உலக விளையாட்டு செய்திகள்
Advertisement
Advertisement